articles

img

புதிய புரிதலை ஏற்படுத்திய புதுக்கோட்டை திரைப்பட விழா சா.ஜனார்த்தனன்

     இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பாக முதலாவது உலக திரைப்பட விழா புதுக்கோட்டையில் கடந்த ஜூன் 10, 11இல் வி சி திரையரங்கில் நடத்தப்பட்டது.

  சமீப காலங்களில் காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி போன்ற பிற்போக்கு மற்றும் பொய்யான கருத்துக்களை தாங்கிய திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து எது நல்ல சினிமா என்பதை இந்த சமூகத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தோடு ஒரு சிறிய அளவில் உலக திரைப்பட விழா நடத்த முடிவெடுத்தோம். இதற்காக பாண்டிச்சேரி யில் வசிக்கும் திரைத்துறை பேராசிரியர் எம்.சிவகுமார் அவர்களை நாடினோம். அவரது ஆலோசனையோடு ஏழு நாடுகளைச் சேர்ந்த எட்டு திரைப்படங்களை இவ்விழாவில் திரையிட்டோம். அந்த எட்டு திரைப்படங்களும் இத்திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சினிமா ஆர்வலர்களுக்கு ஒரு விரிவான பார்வையையும் எது நல்ல சினிமா என்கிற புரிதலையும் ஏற்படுத்தியது.

    1.    சிலி நாட்டைச் சேர்ந்த மை இமேஜ்னரி கண்ட்ரி முதலாவது திரைப்படம். 1977-இல் சிலி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இடதுசாரி அரசை அமெரிக்க சிஐஏ உதவியோடு திட்டமிட்டு கவிழ்க்கப்பட்டது வரலாறு. 2019-இல் சாண்டியாகோ நகரத்தில் 12 லட்சம் மக்கள் பங்கேற்ற போராட்டத்தை மையப்படுத்திய ஆவணப் படம். இப்போராட்டத்தில் பெரும்பாலும் பங்கேற்றவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோருக்கும் கல்வி, மருத்துவம், வேலை, சமத்துவம் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்திய இக்கிளர்ச்சி போராட்டம் வெற்றி கண்டதை சிறப்பாக ஆவணப்படுத்தி உள்ளார் இத்திரைப்பட இயக்குனர்.

   2. 2016-இல் வெளியான சாய்ராட் என்கின்ற மராத்தி திரைப்படம். ஆணவப் படுகொலை இந்தியா முழுவதும் நீக்கமற நிறைந்து உள்ளது என்பதை மிகச் சிறப்பாகவும் நுணுக்கமாகவும் பட மாக்கியுள்ளார் இத்திரைப்பட இயக்கு னர் நாகராஜ் மஞ்ஜீலே. இத்திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

 3. பழிவாங்கும் குணம் மனிதனைத் தவிர எந்த விலங்குகளுக்கும் கிடையாது என்பதை உணர்த்தக் கூடிய வகையில் உருவாகியுள்ளது வைல்ட் டேல்ஸ் என்கின்ற திரைப்படம். மனிதனின் பழிவாங்கும் குணத்தை ஆறு கதைகளின் மூலம் மிக நேர்த்தியாகவும், டார்க் நகைச்சுவையாகவும் சிறப்பாக சித்தரித்து உள்ளார் அர்ஜெண்டினா இயக்குனர் டாமியன் ஜிப்ரான்.

  4.    இயக்குநர் மைக்கல் மோர் இயக்கிய வேர்ட் டு இன்வர்ட் நெக்ஸ்ட் திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்லோவேனியா, ஜெர்மனி, போர்ச்சுக்கல், நார்வே, துனிசியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் இருக்கக்கூடிய மக்கள் நலத் திட்டங்களை அந்த நாடுகளுக்கே சென்று பார்வையிடுகிறார் இத்திரைப்பட இயக்குநர். நம் நாட்டிலும் இதுபோன்ற மக்கள் நல திட்டங்கள் வராதா என்கின்ற ஏக்கத்தை இத்திரைப்படம் உருவாகி யுள்ளது.

   5.    முஸ்டாங் என்கின்ற துருக்கி நாட்டு திரைப் படம் பெண்களுக்கு இழைக்கப்படும் பழமை வாதக் கட்டுப்பாடுகளை அதை எதிர்த்த ஐந்து சகோதரிகளின் நிலையில் இருந்து பெண் விடுதலையை சிறப்பாக விவரித்து படமாக்கியுள்ளார் இப்பட இயக்குநர் டென்னிஸ் காம்சே எர்குவென். இத்திரைப்படம் பெண்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கையும் போராட்ட குணத் தையும் உருவாக்குகிறது.

  6.    2012 இல் வெளியான ஷாஹித் என்ற திரைப்படம் அப்பாவி இஸ்லாமிய மக்களை பெரும் பான்மை மத வெறி பயங்கர வாதிகள் சட்டத்தின் துணை கொண்டு வஞ்சிப்பதும், அவர்களை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஷாஹித் என்ற வழக்கறிஞர் உண்மை யின் துணைகொண்டு அப்பாவி இஸ்லாமியர்களை மீட்டெடுப்பதும் இந்த திரைப்படத்தின் மையக்கரு. இப் போராட்டத்தில் மதவெறியர்களால் இவ்வழக்கறிஞர் கொல்லப்படுகிறார்.இப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் எடுக்கப்பட்டது. அரசியலில் மதம் கலந்தால் என்னவாகும் என்பதை சிறப்பாக விளக்குகிறது இத்திரைப்படம்.

  7.    கல்வி மாஃபியாக்களால் கல்வி வியா பாரம் ஆவதை மிகச் சிறப்பாக விளக்கு கிறது ‘சூப்பர் 30’ திரைப்படம்.இத்திரைப் படமும் உண்மை நிகழ்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான்.மாணவர் களுக்கு ஐஐடி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சியளிக்கும் மையங்களில் இருக்கும் மாஃபியா அரசியலை இத்திரைப்படம் மாணவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

  8.    தி லிட்டில் பிரின்சஸ் என்ற மார்க் அல்போர்ன் இயக்கிய பிரெஞ்சு நாட்டு அனிமேஷன் திரைப்படம் முற்றிலும் புதிய அனுபவத்தை தந்தது.  கலை மக்களுக்காகவே என்பதை இத்திரை அனுபவம் உறுதிப்படுத்தியது. பிற்போக்கு கருத்துக்களை தாங்கி வெளி வரும் திரைப்படங்களுக்கு மாற்றாக முற் போக்கு கருத்துக்களை தாங்கிய திரைப்படம் மூலம் மாணவர்களுக்கும் இளைஞர்க ளுக்கும் இச்சமூகத்திற்கும் கொண்டு சென்று இது போன்ற முற்போக்கு திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவு நாள் நிகழ்வில் சரியாகக் கூறினார்.

     முன்னதாக இத்திரைப்பட விழாவை துவக்கி வைத்து உரையாற்றிய அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, திரைப்படங்கள் ஆரோக்கியமான விவாதங் களை தூண்ட வேண்டும் அதேபோல திரைப் படங்களை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் விழா குறித்த நோக்க உரையாக தமுஎகச மாநிலத் திரை ஒருங்கிணைப்பாளர் களப்பிரன்,  ஒவ்வொரு திரைப்படம் குறித்தான ஆரோக் கியமான கருத்துக்களை திரைத்துறை பேராசிரியர் எம்.சிவக்குமார் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

    இந்நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக், செயலாளர் சிங்கார வேலன், மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சம்சீர் அகமது, மாநில செயற்குழு உறுப்பினர் குமரவேல், தமுஎகச புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் குறிப்பாக இவ்விழாவிற்கு உறுதுணையாக இருந்து உதவிய கி.ஜெயபாலன் மற்றும் மாணவர் சங்க வாலிபர் சங்க புதுக்கோட்டை மாவட்டக் குழு தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.